வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சற்று முன்னதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதையடுத்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது எண்ணிக்கை 2670 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மேலும் 13 பேர் சிகிச்சையின் பின்னர் குணமடைந்து வீடு திரும்பியதை அடுத்து குணமடைந்தவர்களது மொத்த எண்ணிக்கை 2001 ஆக உயர்வடைந்துள்ளது.
இதையடுத்து தற்போது சிகிச்சையில் உள்ளவர்களது எண்ணிக்கை 658 ஆக உள்ளது.
அத்துடன் கொரோனா தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 11 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை